** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 4 January 2015

ஆர்வம் அவசியம்
ஆர்வம் இல்லாத மனிதன் இறக்கைகள் இல்லாத பறவைகளுக்கு ஒப்பானவன் என்று ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. பறவைகளுக்கு இறக்கைகள் இல்லாவிடில் உயரப் பறந்து பல இடங்களுக்கும் சென்று இரை தேட முடியாது.
இரை இல்லாவிட்டால் பறவை உயிரோடு இருக்காது. அதனால்தான் இரை தேடுவதற்குச் சாதகமாக பறவைகளுக்கு இறக்கைகள் அமைந்திருக்கின்றன.
இதேபோல நம்முடைய வாழ்விலும் வெற்றி பெற்று உயர்வடைவதற்கு ஆர்வம் என்ற உணர்ச்சி சாதகமாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதுதான் நம்மை செயல்புரியும் படியாகத் தூண்டும். ஆர்வம் மட்டும் நம்மிடம் இல்லாமல் நாம் உலகில் வாழ முடியும்.
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
இவன் இருக்கப் பெற்றவன்
இவன் இல்லாதவன் என
பேதம் பார்ப்பதில்லை வெற்றி!
வெற்றியென்பது
எல்லோருக்கும் சொந்தம்!
அதனுடன் உன் உறவு எப்படி
என்பதில் தான்
ஏற்றமும் இறக்கமும் இருக்கும்!
நாமெல்லாம் எங்கே?
அதை முடிப்பதென்றால் சாதாரணமா?